ஜூலை 18: இன்று என்ன? - சென்னை மாகாணம் தமிழ்நாடு ஆனது

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்று 1955-ல் பெரியார் குரல் கொடுத்தார். 1956 நவம்பர் 1-ல் மாகாண அமைப்பு முறையானது பல மாநிலங்களாக மாற்றி அமைக்கப்பட்டது.

இருப்பினும் சென்னை மாகாணம் - மதராஸ் மாகாணம் - மெட்ராஸ் மாகாணம் ஆகிய பெயர்களே நீடித்தன. 1956 அக்டோபரில் தியாகி சங்கரலிங்கனார் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் இருந்து உயிர் நீத்தார். 1961-ல் எம்பி பூபேஷ் குப்தா மாநிலங்களவையில், தமிழ்நாடு என்று அழைக்க தனி நபர் மசோதா தாக்கல் செய்தார்.

1967-ல்அண்ணா தமிழக முதல்வரானதும் அதே ஆண்டு ஜூலை 18-ல் தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கான தனி மசோதா நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஜூலை 18 தமிழ்நாடு நாளானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

க்ரைம்

23 mins ago

வர்த்தக உலகம்

47 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

47 mins ago

விளையாட்டு

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்