இந்திய விடுதலைப் போராட்ட வீரர் குதிராம் போஸ் 1889-ம் ஆண்டு வங்காளத்தின் மிதுனப்பூர் கிராமத்தில் பிறந்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டார். 1902-ம் ஆண்டு 13 வயதிருக்கும்போதே விடுதலைப் போராட்ட வீரர்கள் அரவிந்தர், சகோதரி நிவேதிதை ஆகியோரின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டார். 1904-ல் மேதினிப்பூர் கல்லூரியில் படித்தார்.
1905-ல் வங்கப் பிரிவினை போராட்டத்தில் பங்கேற்றார். பின்னர், பல காவல் நிலையங்களை குதிராமின் குழு குண்டுகளால் தாக்கியது. யார் தாக்குகிறார்கள் என்று தெரியாமல் ஆங்கிலேய அரசு மிரண்டது. 1908-ல்குதிராம் கைது செய்யப்பட்டபோது, குதிராம் என்ற இளைஞனின் செயல் என்று ஆங்கிலேய அரசு கண்டுபிடித்தது.
அதனால் குதிராமுக்கு 1908 ஆகஸ்ட் 11-ம் தேதி முசாபர்பூர் சிறையில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. 18 வயதான அவர் "வந்தே மாதரம்" என முழங்கி கொண்டே அகால மரணமடைந்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
44 mins ago
க்ரைம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
கல்வி
2 hours ago
விளையாட்டு
3 hours ago
கருத்துப் பேழை
6 hours ago