இன்று என்ன? - ஞான பீட விருதாளர் எம்.டி.வாசுதேவன்

By செய்திப்பிரிவு

மலையாள எழுத்தாளர், ஞானபீட பரிசு பெற்றவர் எம். டி. வாசுதேவன் நாயர். இவர் 1933 ஆகஸ்ட் 9-ம் தேதி கேரளா பாலக்காடு கூடலூரில் பிறந்தார். பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் படித்தார். சிறுவயதிலேயே மாத்ருபூமி வார இதழில் எழுதினார். மாத்ருபூமி இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் "வளர்த்த மிருகங்கள்" என்ற சிறுகதைக்கு பரிசு பெற்று பிரபலமானார்.

1958-ல் மாத்ருபூமியின் உதவியாசிரியரானார். இவரின் முதல் நாவல் ’பாதிராவும் பகல்வெளிச்சமும்’. இது தொடராக வெளிவந்தது. இவரது முதல் நூல், ‘நாலுகெட்டு’. இதற்கு கேரள சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இவர் எழுதிய ’முறப்பெண்ணு’ என்ற சிறுகதை 1963-ல் திரைப்படமாக வெளிவந்து வெற்றிப்படமானது.

’அக்‌ஷரங்கள்’ என்ற திரைப்படம் அவரது சொந்த வாழ்க்கை என்று சொல்லப்படுகிறது. 1973-ல்நிர்மாலியம் என்ற முதல் படத்தை இயக்கினார். இப்படம் ஜனாதிபதி விருது பெற்று சாதனை படைத்தது. 1995-ல் ஞானபீட விருதும், 2005-ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்