தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்துவிட்டால் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே முகிலனுக்குத் தெரியாது. இன்றைக்கும் அப்படித்தான். மனிதக் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் ஓடினதை பார்த்துக் கொண்டே இருந்தான். அதில், “இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் 370-ன்படி சுரண்டும் நோக்கத்துடன் தன் வலிமையைக் காட்டி, வற்புறுத்தி, பொய்சொல்லி, மோசடி செய்து, அதிகாரத்தைப் பயன்படுத்தி, தூண்டுதலாக விளங்கி, பணம் கொடுத்தோ வாங்கியோ அல்லது வேறுவிதமான பலன்களைக் காட்டியோ பெற்றோரிடமிருந்து அல்லது பொறுப்பாளரிடமிருந்து ஆட்களைச் சேர்ப்பது, அழைத்துச் செல்வது, அடைக்கலம் கொடுப்பது, இடம் மாற்றுவது, ஒரு நபர் அல்லது நபர்களைப் பெறுவது அனைத்தும் ஆட்கடத்தலே” என்ற குறிப்புடன் அனயோரா பற்றிய குறும்படம் ஒளிபரப்பானது.
கடத்தலும் மீட்டலும்: மேற்கு வங்கத்தில் அனயோரா கட்டூன் 1996-ல் பிறந்தார். 7-ம் வகுப்பு படித்தபோது தந்தையை இழந்தார். தொடர்ந்துபள்ளிக்குச் செல்ல வறுமை இடம் கொடுக்கவில்லை. உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். “கொல்கத்தாவில் வீட்டு வேலைக்கு அனயோராவை அனுப்பு. உணவு கொடுத்து படிக்கவும் வைப்பார்கள்” என்று அம்மாவிடம் சொன்னார். அம்மா சம்மதித்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
6 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago