புதுமை புகுத்து - 8: செவ்வாய் கோளில் ஏற்பட்ட அதிபயங்கரமான நிலநடுக்கம்

By த.வி.வெங்கடேஸ்வரன்

இதுவரை பூமியில் நிகழ்ந்துள்ள நிலநடுக்கங்களைவிட ஐந்து மடங்கு அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் 2022ஆம் ஆண்டு மே 4 அன்று செவ்வாய் கோளில் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் விண்கலமும் இந்த கண்டுபிடிப்புக்கு உதவி செய்துள்ளது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையைச் சேர்ந்த டாக்டர் பெஞ்சமின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். இவரின் தலைமையில் சர்வதேச ஆய்வுக்குழு இந்த ஆய்வை மேற்கொண்டது.

செவ்வாய் கோளில் உள்ள எலிசியம் சமவெளி பகுதியில் நாசாவின் இன்சைட் (InSight) விண்கலம் 2018ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று தரையிறங்கியது. செவ்வாயில் ஏற்படும் நில அதிர்வுகள், நிலப்பரப்பின் வெப்ப கடத்து தன்மை, புவியியல் சலனம் முதலியவற்றை இனம் காண்பது தான் இந்த விண்வெளித் திட்டத்தின் முக்கிய நோக்கம். மிகவும் நுட்பமான நில அதிர்வு கருவியை ஏந்தி சென்ற இந்த விண்கலம் 2018 முதல் 2022 டிசம்பர் 20-ம் தேதிவரை 728 நாட்கள் நடத்திய ஆய்வில் சிறிதும் பெரிதுமான 1,300 செவ்வாய் கோள் நிலநடுக்கங்களை இனம் கண்டுள்ளது. ஆரம்பத்தில் நடத்திய ஆய்வில் 2021 டிசம்பர் 24 அன்று ஏற்பட்ட 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்தான் அதுவரை வலுவான நிலநடுக்கமாகப் பதிவாகி இருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

கல்வி

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்