புதுமை புகுத்து - 7: புதிய பார்வை தரும் ‘பயோனிக்’ இயந்திரக் கண்

By த.வி.வெங்கடேஸ்வரன்

உலகம் முழுவதும் நான்கு கோடி பேருக்கு முழுமையாகக் கண்பார்வை இல்லை. மேலும் 13.5 கோடி பேருக்கு குறை பார்வை மட்டுமே உள்ளது என்கிறது உலக சுகாதார நிறுவனம். அப்படியிருக்க விபத்து, நோய் அல்லது மரபணு பிறழ்வு காரணமாகக் கண் பார்வை பறிபோனவர்களுக்கு பயோனிக், இயந்திர கண் கொண்டு கண்பார்வை வழங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். ஆரோக்கியமான நிலையில் இருக்கும் கண், பார்வை வழியே ஒளியை கடத்தி விழியின் லென்ஸ் கொண்டு கண்ணின் பின்புறம் உள்ள விழித்திரையில் ஒளியைக் குவிக்கிறது. விழித்திரையில் கோல் வடிவிலும் கூம்பு வடிவிலும் ஒளி உணர்வு செல்கள் உள்ளன. 910 லட்சம் கோல் வடிவ செல்களும், 45 லட்சம் கூம்பு வடிவ செல்களும் மனித விழித்திரையில் உள்ளன. ஒளி உணரும் திறன் கொண்ட இந்த செல்கள் விழித்திரையில் படியும் காட்சியை மின் சமிக்ஞைகளாக மாற்றி பார்வை நரம்பு வழியாக மூளைக்குச் செலுத்துகின்றன. இந்த தரவுகளை கொண்டு மூளை காட்சியை உருவாக்குகிறது.

கண் இயந்திரம் எதற்கு? - இந்த அமைப்பில் எங்காவது கோளாறு ஏற்பட்டால் பார்வை குறைபாடு உருவாகும். விழி லென்ஸ் சரியாக வேலை செய்யவில்லை என்றால் கண்ணாடி போட்டுச் சரி செய்வது போல பொருத்தமான மருத்துவ தொழில்நுட்பத்தை கைக்கொண்டு பார்வை குறைபாட்டை நீக்கிப் பார்வையை மீள் செய்ய முடியும். சிதைவு நோய், விபத்து போன்றவை காரணமாக விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டால் சரிசெய்வது இதுவரை எளிதாக இருக்கவில்லை. பொதுவே இந்த நோய் உள்ளவர்களுக்குக் கண்ணின் ஒளி உணர் செல்கள் சரிவர இயங்க முடிவதில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

10 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்