தேசிய கலை போட்டியில் பங்கேற்க மதுரை பள்ளி மாணவர்கள் 2 பேர் தேர்வு

By செய்திப்பிரிவு

மதுரை: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜனவரி மாதம் நடைபெறும் தேசிய கலைப் பண்பாட்டுத் திருவிழா போட்டியில் பங்கற்க மதுரை பள்ளி மாணவர்கள் 2 பேர் தகுதிபெற்றுள்ளனர்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான கலை பண்பாட்டுத் திருவிழா போட்டிகள் நடந்தன.

இதில் மதுரை மாவட்டம் சார்பில் 19 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் மேல்நிலைப் பள்ளி மாணவர் டி.சந்தோஷ் ஓவியப் போட்டியில் (இரு பரிமாணம்) மாநில அளவில் முதல் பரிசு பெற்றார். லட்சுமிபுரம் டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஏ.சபரி விக்னேஷ், நாட்டுப்புறப் பாடல்கள் பிரிவில் வாய்ப்பாட்டு இசையில் மாநில அளவில் முதல் பரிசு பெற்றார். இருவரும் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். மேல அனுப்பானடி ஏபிடி துரைராஜ் மேல்நிலைப் பள்ளிமாணவர் பிரவீன் குமார், உள்ளூர்தொன்மை விளையாட்டுப் பொம்மை உருவாக்கும் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் பரிசு பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 mins ago

விளையாட்டு

43 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்