தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2-ம் மற்றும் 3-ம் நிலைமொழித்தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வுகள் நவம்பர் 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, கோவை, மதுரை, நாகர்கோவில் ஆகிய 7 மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் அதிக கனமழை மற்றும் வானிலை சிவப்பு எச்சரிக்கை காரணமாக, தேர்வர்களின் நலனைக் கருத்தில்கொண்டு நவம்பர் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை (4 நாட்கள்) நடைபெறவிருந்த மொழித்தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகின்றன. இந்த நாட்களில் நடைபெறவிருந்த நேர்காணல் தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
18 mins ago
இந்தியா
1 min ago
க்ரைம்
36 mins ago
சுற்றுச்சூழல்
42 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
வர்த்தக உலகம்
2 hours ago
ஆன்மிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago