‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து நடத்தும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி வரும் 31-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு இணையவழியில் நடைபெற உள்ளது.
யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படைக் கல்வித் தகுதி என்ன, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், எவ்வளவு செலவாகும் என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம்.
அவ்வாறான தயக்கத்தைப் போக்கி, இந்த தேர்வுகளுக்குப் படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது. காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் ஒரு மணி வரை நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில், அண்மையில் வெளியான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் 157-வதுஇடம்பிடித்த சென்னை ஏ.கேத்தரின் சரண்யா, 344-வது இடம்பிடித்த தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் எம்.அருண் பாண்டியநாதன், சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டு, கருத்துரையாற்ற உள்ளனர்.
கரோனா பரவல் காரணமாக வீடுகளில் தனித்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/00089 என்ற லிங்க்-ல் பதிவுசெய்து கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
11 mins ago
இந்தியா
35 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
இந்தியா
3 hours ago