சென்னை மாவட்டத்தில் தேர்வான 15 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

By செய்திப்பிரிவு

மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 15 ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படும்.

அதன்படி, தமிழகத்தில் சிறந்த ஆசிரியர்களுக்கு ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’என்ற பெயரில் மாநில நல்லாசிரியர் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு அனைத்து விதமான பள்ளிகளில் பணிபுரிந்த 379 ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 389 பேர் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்குவதன் அடையாளமாக சென்னை மாவட்டத்தில் தேர்வான ஆசிரியர்கள் 15 பேருக்கு மட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முதன்மைச் செயலர் காகர்லா ஷாஉள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வழக்கமாக மாநில நல்லாசிரியர் விருது சான்றிதழில் முதல்வரின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும். ஆனால், நடப்பாண்டு வழங்கப்பட்ட நல்லாசிரியர் சான்றுகளில் முதல்வரின் புகைப்படம் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்