2021-ம் ஆண்டின் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு பணி தொடக்கம்

By செய்திப்பிரிவு

பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் 2021-ம் ஆண்டுக்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன.

6 முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தவும், ஆய்வுக் கண்ணோட்டத்தை வளர்க்கவும் 1993-ம் ஆண்டு முதல்தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த 28 ஆண்டுகளாக இந்த மாநாட்டுப் பணிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. சிறந்த ஆய்வுகளை சமர்ப்பிக்கும் மாணவர்கள் மாநில மாநாடுகளிலும், தேசிய அளவிலான மாநாட்டிலும் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ‘நிலைப்புரு வாழ்க்கைக்கான அறிவியல்’ (Science for Sustainable Living) என்ற கருப்பொருளின் கீழ்பல்வேறு தலைப்பில் மாணவர்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இதற்கான மண்டல, மாவட்ட அளவிலான பயிற்சி முகாம்கள் தற்போது தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஆய்வில் பங்கேற்பவர்களுக்கான வழிகாட்டி கையேடு நேற்று வெளியிடப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐவளாகத்தில், மாநில பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் இந்த கையேட்டை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொதுச் செயலர் எஸ்.சுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

24 mins ago

விளையாட்டு

15 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்