பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அடுத்து என்ன படிப்பது, எங்கே படிப்பது எனும் கேள்விகளுக்கு விடைகாணும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் வழிகாட்டி நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
அதன்படி, அம்ரிதா விஷ்வவித்யாபீடம் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் இந்த ஆன்லைன் வழிகாட்டிநிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறுமாலை 4.30 மணிக்கு நடக்கிறது.
சனிக்கிழமை நிகழ்ச்சியில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ் படிப்புகள் குறித்து அம்ரிதா விஷ்வ வித்யாபீடத்தின் (பி.டெக். சேர்க்கை) தலைவர் மகேஷ்வர சைதன்யா, ராணுவ விஞ்ஞானியும் என்டிஆர்எஃப் இயக்குநருமான டாக்டர் வி.டில்லிபாபு, குவி கீக் பிரைவேட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ எஸ்.பி.பாலமுருகன் ஆகியோர் பங்கேற்றுஆலோசனை வழங்குகின்றனர்.
ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன்
ஞாயிற்றுக்கிழமை நிகழ்வில், ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன் படிப்புகள் குறித்து கேரியர் கைடன்ஸ் நிபுணரும் தி எண்ட்ரன்ஸ் கேட் நிறுவனர் மற்றும் சிஇஓ ஆர்.அஸ்வின், அம்ரிதா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் உதவிப் பேராசிரியர் டாக்டர் கே.எல்.வாசுதேவ், எஸ்பி ரோபோடிக்ஸ் ஒர்க்ஸ்இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஸ்நேக ப்ரியா ஆகியோர் ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
இந்த நிகழ்வுகளில் பிளஸ் 2முடித்த மாணவ-மாணவியர்களும், அவர்களது பெற்றோரும் பங்கேற்கலாம். கட்டணம் கிடையாது. இன்ஜினீயரிங் படிப்புகள் தொடர்பான கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்களைப் பெறலாம். பங்கேற்க விரும்புபவர்கள் https://bit.ly/3dNjhSa என்ற லிங்க்கில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இந்த நிகழ்வை ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் உடன் இணைந்து வழங்குகிறது. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்க விரும்புபவர்கள் https:// www.facebook.com/hindutamil events என்ற ஃபேஸ்புக் லிங்க்கிலும், https://bit.ly/3dHj4Q9 என்றயூ-டியூப் லிங்க்கிலும் இணைந்திருங்கள்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
6 hours ago
ஓடிடி களம்
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
தமிழகம்
7 hours ago