‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியில் ஓட்டல் மேலாண்மைக் கல்வி குறித்து இன்று இணையவழி ஆலோசனை

By செய்திப்பிரிவு

‘இந்து தமிழ் திசை’, எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓட்டல் மேனேஜ்மென்ட் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்வில் ஓட்டல் மேலாண்மைக் கல்வி பற்றிய ஆலோசனை இன்று (ஜூன் 19)காலை 11 மணிக்கு இணையவழியில் நடைபெறுகிறது

பிளஸ் 2 படித்துவிட்டு, அடுத்துஎங்கு, என்ன படிப்பது, எந்தபடிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம்என பல கேள்விகள் மாணவர்களுக்கு எழும். அவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இணைய வழியில் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் ஆலோசனை நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’, எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓட்டல் மேனேஜ்மென்ட் வழங்குகின்றன.

இன்று (ஜூன் 19) காலை 11 மணிக்கு இணைய வழியில் நடக்கும் இந்த நிகழ்வில் ஓட்டல்மேலாண்மைக் கல்வி குறித்து பிரபல கல்வியாளர்கள் உரையாற்றுகின்றனர். இதில் ‘தி ரெசிடன்ஸிஓட்டல்ஸ்’ முதன்மை செயல் அதிகாரி பி.கோபிநாத், உலக சமையல் கலைஞர்கள் சங்கங்களின் கவுரவஉறுப்பினர் டாக்டர் செஃப் சவுந்தர்ராஜன், எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓட்டல் மேனேஜ்மென்ட் இயக்குநர் டாக்டர் ஆன்டனி அசோக்குமார் ஆகியோர் பங்கேற்று, ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை. இதில் பங்கேற்க விரும்புவோர் https://bit.ly/3ghbwp7 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும். கூடுதல் விவரங்களுக்கு 9840961923 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்