துறைத்தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

துறைரீதியான தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டஅறிவிப்பில் கூறியிருப்பதாவது:

அரசுப் பணிகளின் துறைத்தேர்வு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி துறைத்தேர்வுகள் இனி ஆன்லைனில் மட்டுமே நடத்தப்படும். இந்த புதிய நடைமுறை ஜூன் மாதம் நடைபெறவுள்ள தேர்வில் அறிமுகம் செய்யப்படும்.

பல்வேறு விதமான துறைகளில் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை குறித்த விவரங்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இதையடுத்து ‘அப்ஜெக்டிவ்’ (கொள்குறி) வகையிலான வினாத்தாள் கொண்ட துறைத் தேர்வுகள்மட்டும் ஆன்லைனில் நடத்தப்படும். மற்ற தேர்வுகளுக்கு தற்போதைய நடைமுறையே தொடரும். ஆன்லைன் வழியிலான துறைத் தேர்வுகள் ஜூன் 22 முதல் 26-ம் தேதி வரைநடைபெறும். எழுத்து வடிவிலான தேர்வுகள் ஜூன் 27-ம் தேதி முதல் தொடங்கும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

3 mins ago

ஜோதிடம்

29 mins ago

க்ரைம்

19 mins ago

இந்தியா

33 mins ago

சுற்றுலா

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்