ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்காக அரசு நடத்தும் இலவச பயிற்சிக்கு 6,000 மாணவர்கள் விண்ணப்பம்

By செய்திப்பிரிவு

அரசின் இலவச ஜேஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சியில் பங்கேற்க 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை எழுதுவதற்கு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக, ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சி இணைய வழியில் வழங்கப்பட உள்ளது. இதற்காக டெல்லியை சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் பள்ளிக்கல்வித் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களுக்கு மட்டும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பயிற்சி வகுப்புகள் வரும் 4-ம் தேதி தொடங்க உள்ளன. இதில் பங்கேற்க இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விருப்பம் உள்ள மாணவர்கள் தங்களது பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதவிர, தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கும் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

12 hours ago

மேலும்