யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ‘ஆளப் பிறந்தோம்’ ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சி: இன்று காலை 10.30 மணிக்கு நடக்கிறது

By செய்திப்பிரிவு

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘சங்கர்ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்துவழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சி இன்று (டிச.27) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெற வேண்டுமென்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால்,அதற்கான கல்வித் தகுதி, எத்தனைஆண்டுகள் படிக்க வேண்டும், செலவு என பல்வேறு கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம்.அந்தத் தயக்கத்தைப் போக்கும் வகையில், ‘ஆளப் பிறந்தோம்’ என்ற ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரிமாணவ - மாணவிகளும், யுபிஎஸ்சி,டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராவோரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இந்நிகழ்ச்சியில் மேகாலயா மாநில சுகாதாரத் துறை இணைச்செயலாளர் எஸ்.ராம்குமார், ஐஏஎஸ்., ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் ஆட்சியர் எம்.பிரதீப் குமார், ஐஏஎஸ்., சங்கர் ஐஏஎஸ் அகாடமிஇயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். காலை 10.30மணி முதல் மதியம் 1 மணிவரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.

இதில் அனைவரும் பங்கேற்கலாம். பதிவுக் கட்டணம் கிடையாது. பங்கு பெற விரும்புவோர் https://connect.hindutamil.in/event/44-alapiranthom.html என்ற லிங்க்கில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்