சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம்டிச.31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.மதிவாணன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் 2020-2021-ம் கல்வி ஆண்டில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் டிச.31வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விண்ணப்பம் வழங்கவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் டிச.31-ம் தேதி கடைசி நாள். இதற்கான ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை மையம், தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களும் இயங்கும். விருப்பமுடைய மாணவர்கள் www.online.ideunom.ac.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாகவும் சேரலாம்.
அதுமட்டுமின்றி, சென்னைபல்கலைக்கழக கல்வி மையங்கள் மூலமாகவும் சேர முடியும்.இதுதொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
35 mins ago
இந்தியா
59 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
5 hours ago