புயல் தாக்கம்: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு வரும் 28-ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு

By செ.ஞானபிரகாஷ்

நிவர் புயல் தாக்கம் மற்றும் கனமழையால் புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு வரும் 28-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்றால் மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டிருந்த பள்ளிகள், கடந்த அக்டோபர் மாதம் 8-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கின. சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளும் வகையி்ல் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டு வகுப்புகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் நிவர் புயல் காரணமாகப் புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்குச் சந்தேகம் தீர்வு காணும் வகுப்புகளுக்கும், இதர ஆன்லைன் வகுப்புகளுக்கும் நேற்றும், இன்றும் (நவ 24 மற்றும் 25) ரத்து செய்யப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் கல்வித் துறை இயக்குநர் ருத்ரகவுடு இன்று வெளியிட்ட உத்தரவில், "நிவர் புயல் தாக்கம் மற்றும் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு நவம்பர் 26 முதல் 28-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

சினிமா

16 mins ago

உலகம்

30 mins ago

விளையாட்டு

37 mins ago

ஜோதிடம்

19 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்