மருத்துவ மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதி

By செய்திப்பிரிவு

மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதியாகும்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா,ஆயுர்வேதா உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

இவற்றுக்கான கலந்தாய்வுக்கு மாணவர்கள் நவ.3 -ம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர். நாளை (நவ.12-ம் தேதி) மாலை 5 மணி வரை மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் நவ.16-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும் எனவும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அரசு ஒதுக்கீடு மற்றும் தனியார் ஒதுக்கீட்டுக்கு https://tnmedicalonline.xyz/ug/mbbs_bds/index.aspx என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: http://tnmedicalselection.net/news/02112020234138.pdf

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்