பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு முதலாண்டு வகுப்புகள் நவ.23-ல் தொடக்கம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பொறியியல் கல்லூரிகளில் சேர்ந் துள்ள மாணவர்களுக்கு முத லாண்டு வகுப்புகள் நவ.23-ம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல் கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல் கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 461 பொறியியல் கல்லூரிகளில் இள நிலை படிப்புகளுக்கு 1 லட்சத்து 63,154 இடங்கள் உள்ளன. இதற் கான மாணவர் சேர்க்கை கலந் தாய்வு கடந்த அக்.1 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. அதில் 71,195 இடங்கள் நிரம்பின. 91,959 இடங்கள் காலியாக உள்ளன.

இந்நிலையில், அண்ணா பல் கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதலாண்டுக்கான முன்பயிற்சி வகுப்புகள் நவ.9-ம் தேதி முதல் நடத் தப்படும். நடப்பு பருவத்துக்கான வழக்கமான வகுப்புகள் நவ.23-ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 24-ம் தேதி வரை நடைபெறும். அதைத் தொடர்ந்து செய்முறைத் தேர்வு பிப்.26-ம் தேதியும், பருவத் தேர்வு கள் மார்ச் 8-ம் தேதியும் தொடங் கும். வகுப்புகள் தொடங்கியதும் விரிவான தேர்வு கால அட்ட வணை வெளியிடப்படும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

59 mins ago

க்ரைம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்