கேரளாவில் 18 திருநங்கைகள் கல்லூரிப் படிப்புக்குத் தேர்ச்சி: மாநில எழுத்தறிவு இயக்கம் முன்னெடுப்பு

By பிடிஐ

மாநில எழுத்தறிவு இயக்கத்தின் முன்னெடுப்பால், கேரளாவில் திருநங்கைகள் 18 பேர், 12-ம் வகுப்புக்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் படிக்கத் தேர்வாகியுள்ளனர்.

இவர்கள் சமன்வயா திட்டத்தின் கீழ் கல்வி பெற்றுள்ளனர். இத்திட்டம் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் 4 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதாந்திர கல்வி உதவித் தொகையோடு இலவசமாகக் கற்பித்தலை நிகழ்த்துவது ஆகும்.

இதன்படி 10-ம் வகுப்புக்கு இணையாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை பெறுவர். இதுவே 12-ம் வகுப்புக்கு இணையான படிப்பில் வென்றோருக்கு மாதந்தோறும் ரூ.1,250 உதவித் தொகை கிடைக்கும். அவர்கள் உயர் கல்வியில் சேர விண்ணப்பிக்க முடியும்.

இத்திட்டத்தின் கீழ் 22 திருநங்கைகள் தேர்வெழுதியதில் 18 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக பத்தினம்திட்டாவில் 8 திருநங்கைகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சமன்வயா திட்டத்தின் கீழ் இதுவரை 39 திருநங்கைகளுக்கு உயர் கல்வி பயில வாய்ப்பு கிடைத்துள்ளது. 30 திருநங்கைகள் 10-ம் வகுப்புக்கு இணையான பாடத்திட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். 62 திருநங்கைகள் 12-ம் வகுப்புக்கு இணையான பாடத்திட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநில எழுத்தறிவு இயக்கத்தின் திட்ட இயக்குநர் பி.எஸ்.ஸ்ரீகலா, தேர்ச்சி பெற்ற திருநங்கைகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்