பொறியியல் பாடப் பிரிவின் முக்கியத்துவம் குறித்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் நிபுணர்கள் இன்று உரை: ‘இந்து தமிழ் திசை’, சவீதா இன்ஜினீயரிங் காலேஜ் வழங்குகின்றன

By செய்திப்பிரிவு

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், சவீதா இன்ஜினீயரிங் காலேஜ் உடன் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் இன்று (ஞாயிறு) மாலை 4 மணிக்கு பொறியியல் படிப்பில் பாடப் பிரிவுகளை தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவம் குறித்து நிபுணர்கள் உரையாற்றுகின்றனர்.

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளி, கல்லூரிமாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சவீதா இன்ஜினீயரிங் காலேஜ் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

பிளஸ் 2 முடித்துவிட்டு, அடுத்துஎங்கு, என்ன படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகள், குழப்பங்களோடு நிற்கும் மாணவர்கள், பெற்றோருக்கு வழிகாட்டும் வகையில் இந்தஇணையவழி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்வு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதில் கோயம்புத்தூர் ‘சீமா’ தலைவர் கே.வி.கார்த்திக், சென்னை சின்புரோசாஃப்ட் சிஇஓ டாக்டர் பத்ரி சேஷாத்ரி, சென்னை எல்எம்இஎஸ் அகாடமி நிறுவனர் பிரேமானந்த் சேதுராமன் ஆகியோர் கலந்துகொண்டு, பொறியியல் படிப்பில்பாடப் பிரிவுகளை தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவம் தொடர்பான பயனுள்ள தகவல்களை பகிர்ந்துகொள்கின்றனர்.

இதில் பங்கேற்க கட்டணம் கிடையாது. அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர் https://connect.hindutamil.in/event/35-uuk.html என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்