‘இந்து தமிழ் திசை’, ‘என்டிஆர்எஃப்’, FIITJEE நடத்தும் ‘இன்ஸ்பைரோ’ வழிகாட்டி நிகழ்ச்சி: பொறியியல், மருத்துவ துறை குறித்து இன்று உரை

By செய்திப்பிரிவு

‘இந்து தமிழ் திசை’, தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (NDRF), FIITJEE உடன் இணைந்து நடத்தும் ‘இன்ஸ்பைரோ’ எனும் பொறியியல் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த வழிகாட்டி நிகழ்ச்சிஇன்று (செப்.18) தொடங்கி, தொடர்ந்து 3 நாட்கள் ஆன்லைனில் நடக்க உள்ளது.

இந்நிகழ்வை சந்திரயான் திட்டமுன்னாள் இயக்குநரும், என்டிஆர்எஃப் தலைவருமான டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை இன்றுதொடங்கி வைக்கிறார். எஸ்ஆர்எம்இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் வேதியியல் துறை பேராசிரியர் டாக்டர் சக்கரபாளையம் எம்.மகாலிங்கம், ‘மருந்து ஆராய்ச்சி: கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் உரையாற்றுகிறார்.

நாளை, சென்னை டிஆர்டிஓ, காம்பாட் வாகன ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (சிவிஆர்டிஇ) விஞ்ஞானியும் இயக்குநருமான டாக்டர் வி.பாலமுருகன், ‘காம்பாட்வாகனத்தின் ஆராய்ச்சி வாய்ப்புகள்’ எனும் தலைப்பிலும், நாளை மறுநாள் திருச்சி நேஷனல்இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி முன்னாள் இயக்குநர் டாக்டர் சீனிவாசன் சுந்தர்ராஜன், ‘NITs: கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள்’ எனும் தலைப்பிலும் உரையாற்றுகின்றனர்

9 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ளமாணவ-மாணவிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். பங்கேற்பு கட்டணம் கிடையாது. தினமும் மாலை 6 முதல் 7 மணி வரை இந்நிகழ்வு நடைபெறும். இதில் பங்கேற்க https://connect.hindutamil.in/event/37-inspiro.html என்ற லிங்க்கில் பதிவு செய்துகொள்ள வேண்டும். முதலில் பதிவு செய்யும் 200 பேருக்கு டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய ‘அடுத்த கலாம்’ நூல் இலவசமாக வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

37 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்