பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செப்.25-ல் வெளியீடு: அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் செப்.25-ம் தேதி வெளியிடப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 523 மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

இங்கு வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் இந்த ஆண்டு நிரப்பப்பட உள்ளன. அவர்களுக்கு ஆகஸ்ட் 26-ம் தேதி ஆன்லைன் மூலமாக ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து, அடுத்த கட்ட நிகழ்வான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணியில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே தரவரிசைப் பட்டியல் செப். 17-ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கரோனா காரணமாக மாணவர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்ற அவகாசம் கோரியதால், தரவரிசைப் பட்டியல் செப்.25-ம் தேதி வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாணவர்கள் tneaonline.in என்ற இணையதள பக்கத்தில் தங்களுடைய அக்கவுண்ட்டில் லாகின் செய்து சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு விட்டதா என்று உறுதி செய்யலாம்.

ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மாணவர்கள் 044-22351014, 22351015 என்ற உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்