பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு ஹால்டிக்கெட் நாளை வெளியீடு

By செய்திப்பிரிவு

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை (செப்.15) வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட அறிவிப்பு: பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்.21 முதல் 26-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் செப்.15-ம் தேதி முதல் ஹால்டிக்கெட்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதேநேரம் விண்ணப்ப எண்ணை தவறவிட்டவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்வுத்துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு தங்கள் ஹால்டிக்கெட்களை பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட்டில் தெரிவிக்கப்பட்ட தேர்வு மையத்தில் செப்.17, 18-ம் தேதிகளில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும். தேர்வு அட்டவணை உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

தமிழகம்

18 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்