வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப்சயின்ஸ், டெக்னாலஜி அண்ட் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் இன்று மாலைகடல்சார் (மரைன்) படிப்புகள் குறித்து நிபுணர்கள் உரையாற்றுகின்றனர்.
கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி அண்ட் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (‘விஸ்டாஸ்’) உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
பிளஸ் 2-க்குப் பிறகு, அடுத்து எங்கு, என்ன படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகள், குழப்பங்களோடு நிற்கும் மாணவர்கள், பெற்றோருக்கு வழிகாட்டும் வகையில் இந்தஆன்லைன் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்வில் இன்று கடல்சார் படிப்புகள் பற்றிய பல்வேறு தகவல்கள் குறித்து நிபுணர்கள் உரையாற்றுகின்றனர். இந்நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். இதில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக நிறுவனத்தின் சேர்மன் டி.கே.ராமச்சந்திரன் ஐஏஎஸ், சிங்கப்பூர் ஈகிள்ஸ்டார் ஷிஃப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் மாஸ்டர் மரைன் கேப்டன் ஏ.முசுகுந்தன், ‘விஸ்டாஸ்’ ஸ்கூல் ஆஃப் மரைன் ஸ்டடீஸ் இயக்குநர் கேப்டன் என்.குமார் ஆகியோர் கலந்துகொண்டு கடல்சார் படிப்புகள் தொடர்பான பயனுள்ள தகவல்களை பகிர்ந்துகொள்ள உள்ளனர்.
இதில் பங்கேற்க கட்டணம் கிடையாது. அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர் https://connect.hindutamil.in/uuk.php என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளவும். ‘இந்து தமிழ் திசை’, ‘வேல்ஸ் இன்ஸ்டிடியூட்’ இணைந்து நிகழ்ச்சியை வழங்குகின்றன
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
சினிமா
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
சினிமா
6 hours ago