செப்.13-ல் நடைபெறுகிறது நீட் தேர்வுக்கு விரைவில் ஆன்லைனில் ஹால்டிக்கெட்

By செய்திப்பிரிவு

நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஹால்டிக்கெட் விரைவில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என என்டிஏ அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (நீட்) செப்டம்பர் 13-ம் தேதி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு தேசிய அளவில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு விரைவில் ஆன்லைனில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படும்.

விண்ணப்பதாரர்களில் 99.87 சதவீதம் பேருக்கு அவர்கள் விரும்பிய தேர்வு மைய இடம் ஒதுக்கீடு செய்யப்படும். தேர்வு தொடங்குவதற்கு முன்பும் தேர்வு நடந்து முடிந்த பின்பும் தேர்வு மையங்களை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த விரிவானஏற்பாடுகள் செய்யப்படும். தேவைக்கு ஏற்ப, விண்ணப்பதாரர்களுக்கு முகக் கவசம், கையுறை வழங்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

உலகம்

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்