தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்: முதுகலை தமிழ் படித்தால் மாதம் ரூ.2000 உதவித்தொகை

By செய்திப்பிரிவு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பட்டப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31-ம் தேதி கடைசி நாளாகும்.

இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலை (எம்.ஏ. தமிழ்), ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை (Five year Integ. P.G. M.A Tamil) மற்றும் தமிழ் ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) பட்ட வகுப்புகள் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

2020-21 ஆம் கல்வியாண்டிற்கான மேல்குறிப்பிட்டுள்ள பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

கட்டண விவரம்:

தமிழ் ஆய்வியல் நிறைஞர் வகுப்பு (M.Phil.) - ரூ. 4,600/-
தமிழ் முதுகலை (எம்.ஏ. தமிழ்) - கட்டணம் இல்லை
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை - ரூ.2,400/-

சேர்க்கை விண்ணப்பங்களை தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணையப் பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அஞ்சல் வழியிலும் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31.08.2020

சேர்க்கை தொடர்பான விதிமுறைகள் மற்றும் தகவல்களை http://www.ulakaththamizh.in/ என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் முதுகலை வகுப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களில் 15 பேருக்கு தமிழக அரசால் கல்வி உதவித் தொகையாக மாதந்தோறும் தலா ரூ,2000 வழங்கப்படும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

23 mins ago

க்ரைம்

29 mins ago

க்ரைம்

38 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்