தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷா ராணி, அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஆக.10) காலை 9.30 மணிக்கு வெளி யாக உள்ளது. தேர்வு முடிவு களை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். இது தவிர பள்ளிகளுக்கு மின்னஞ் சல் மூலமும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு குறுந்தகவல் மூலமும் முடிவு கள் அனுப்பப்படும்.
அனைத்து தலைமை யாசிரியர்களும் தங்கள் பள்ளிகளுக்கான பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணைப் படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்குரிய முன்னேற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27 முதல் ஏப்.13 வரை நடை பெற இருந்தது. கரோனா பரவல் காரணமாக பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்ற தாக அறிவிக்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago
சினிமா
11 hours ago
க்ரைம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago