அமிர்தா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் இன்று (ஆகஸ்ட் 7) பயோ டெக்னாலஜி, பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங் படிப்புகள் பற்றி துறைசார் வல்லுநர்கள் உரையாற்றுகின்றனர்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோருக்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
பிளஸ் 2 முடித்துவிட்டு, அடுத்து எங்கு, என்ன படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகளோடு நிற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையிலான இந்த நிகழ்ச்சி கடந்த ஜூலை 24-ம் தேதி தொடங்கியது. தினமும் பல்வேறு துறைகள் தொடர்பாக அந்தந்த துறை வல்லுநர்கள் உரையாற்றி வருகின்றனர்.
வழிகாட்டும் வல்லுநர்கள்
இன்றைய நிகழ்வில் சென்னை சிஃபோ ஆர்என்டி சொலூஷன்ஸ் இணை நிறுவனரும், முதன்மை செயல் அதிகாரியுமான ராஜ் பிரகாஷ், கோவை ஜெம் மருத்துவமனையின் ஜெம் இன்ஸ்டிடியூட் ஃபார் கேஸ்ட்ரோஎன்டராலஜி, லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சி.பழனிவேலு, சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பயோ இன்ஜினீயரிங் துறைத் தலைவர் டாக்டர் பி.பிருந்தா தேவி ஆகியோர் கலந்துகொண்டு பயோ டெக்னாலஜி, பயோ-மெடிக்கல் இன்ஜினீயரிங் படிப்புகள் தொடர்பான பயனுள்ள தகவல்களை பகிர்ந்துகொள்கின்றனர்.
கட்டணம் இல்லை
இந்த நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இதை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் இணைந்து நடத்துகிறது. இதில் பங்கேற்க கட்டணம் இல்லை. அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள், பெற்றோர் https://connect.hindutamil.in/uuk.php என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளவும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
25 mins ago
இந்தியா
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சுற்றுலா
3 hours ago