பள்ளிகளில் டெங்கு பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாகப் பள்ளிக்கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''பருவ மழைக் காலத்தில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களைக் கண்டறிந்து அழிப்பது அவசியம். அதன்படி வாரந்தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு தடுப்பு தினம் அனுசரிக்கப்பட வேண்டும்.
இதுதவிர, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தீவிர கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளியின் வகுப்பறை மற்றும் கழிப்பறைகளைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். அவ்வாறு தண்ணீா் தேங்கியிருப்பின் உடனே அதை அகற்ற வேண்டும்.
பள்ளி வளாகத்தில் கொசுக்கள் முட்டையிட ஏதுவான தேங்காய் ஓடுகள், பழைய டயர்கள், பூந்தொட்டிகள், தட்டுகள், தண்ணீர்த் தொட்டிகள், பள்ளிக் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள பொருட்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். அவற்றில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். தூய்மைப் பணியாளா்கள் உதவியுடன் பள்ளி வளாகத்தைத் தூய்மைப்படுத்தி, பள்ளியைச் சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.''
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago