அரசு கல்லூரிகளில் இணைய வகுப்பு நாளை தொடக்கம்: கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நாளை (ஆகஸ்ட் 3) முதல்இணைய வகுப்புகளைத் தொடங்ககல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இணைய வகுப்புகளை நாளை (ஆக.3) முதல் தொடங்க வேண்டும். இணையதள வசதியில்லாத மாணவர்களுக்கு வாட்ஸ்ஆப் செயலி வழியாக அல்லது கல்லூரி இணையதளத்தில் பாடங்களை பதிவேற்றம் செய்து வழங்க வழிவகை செய்ய வேண்டும்.

இதுதவிர துறைத் தலைவர்கள், வகுப்புகளுக்கான காலஅட்டவணை, பாடம் தயாரித்தல் மற்றும்மாணவர்களின் வருகைப்பதிவு குறித்து முறையான திட்டமிடுதலை முதல்வரின் ஆலோசனையின்படி மேற்கொள்ள வேண்டும். அனைத்து மாணவர்களும் இணைய வகுப்புகளில் பங்கேற்பதை உறுதிசெய்ய வேண்டும்.இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரங்களை அறிக்கையாக மண்டல இணை இயக்குநருக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

விளையாட்டு

9 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்