ஜேஇஇ மெயின், என்டிஏ தேர்வுகளுக்கான விண்ணப்பப் படிவத்தைத் திருத்த மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படும் ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு ஜூலை 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெற இருந்தது. எனினும் கரோனா சூழல் காரணமாக தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு செப்டம்பர் 27-ம் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல யூபிஎஸ்சி நடத்தும் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வும் செப்டம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளின் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், ஜேஇஇ, என்டிஏ தேர்வுகளுக்கான விண்ணப்பப் படிவத்தைத் திருத்த மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஜூலை 31-ம் தேதி வரை, மாணவர்கள் தங்களின் விண்ணப்பப் படிவத்தைத் திருத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago