12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: அரசுப் பள்ளிகளில் 85.94% மாணவ, மாணவிகள் தேர்ச்சி

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் 85.94% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளாகவும் தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 99 ஆயிரத்து 717. பள்ளி மாணவ,மாணவிகளாக தேர்வெழுதியோரின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 79 ஆயிரத்து 931.

இதில் மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 24 ஆயிரத்து 285. மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 55 ஆயிரத்து 646. பொதுப் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 28 ஆயிரத்து 516. தொழிற்பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் மொத்த எண்ணிக்கை 51 ஆயிரத்து 415.

இந்நிலையில்,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (ஜூலை 16) அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் 92.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 7,127. இதில், 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 2,120.

இதில்,

அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.94%

அரசு உதவிபெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 94.30%

மெட்ரிக் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 98.70%

இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் தேர்ச்சி விகிதம் 92.72%

பெண்கள் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 94.81%

ஆண்கள் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 83.91%

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 mins ago

விளையாட்டு

23 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

மேலும்