ஆன்லைன் வகுப்பில்லை; தொலைக்காட்சி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

By செய்திப்பிரிவு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கற்பிக்கப்படாது எனவும் தொலைக்காட்சி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே அரசுப் பள்ளிகளுக்கான கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜையில் நேற்று பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ''தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் மூலமாகப் பாடங்கள் நடத்தப்படும். வரும் ஜூலை 13-ம் தேதி முதல்வர் அதனைத் தொடங்கி வைப்பார்'' என்று தெரிவித்திருந்தார்,

இது கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தி, பேசுபொருளானது. இந்நிலையில், இன்று (ஜூலை 9) ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதை மறுத்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய அவர், ''பாடங்கள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படமாட்டாது. தொலைக்காட்சிகள் மூலம் பாடங்கள் நடத்தப்படும். இதற்காக 3 தொலைக்காட்சிகள் தயார் நிலையில் உள்ளன.

12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதினால் மட்டுமே தேர்ச்சி வழங்க முடியும். 10-ம் வகுப்பைப் போலத் தேர்வே எழுதாமல், அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

41 mins ago

விளையாட்டு

32 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்