கரோனா வைரஸ் தொற்று காரணமாக காமராஜர் பிறந்தநாள் விழா மாவட்டக் கல்வி அலுவலகங்களில் எளியமுறையில் கொண்டாடப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதிகல்வி வளர்ச்சி தினமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது கரோனா வைரஸ் பரவலின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனவே, வரும் ஜூலை 15-ம் தேதியன்று அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் காமராஜர் திருவுருவப் படத்தை அலங்கரித்து கல்வி வளர்ச்சி தினத்தை கொண்டாட வேண்டும்.
மேலும், இதுதொடர்பான விவரத்தை புகைப்படத்துடன் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
தமிழகம்
2 hours ago