அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31-ம் தேதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் அனிதா கர்வால், அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
உள்துறை அமைச்சகம் ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்தாலும், பள்ளி, கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31-ம் தேதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஜூலை 31-ம் தேதி வரை வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. முக்கிய தேவைகள் இல்லாதபட்சத்தில் ஊழியர்களை பணிக்கு அழைப்பதை கல்வி நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும். அதேநேரம் இணையவழி கற்றல்மற்றும் தனிநபர் இடைவெளியுடன் கூடிய கற்பித்தல் செயல்பாடுகளுக்கு அனுமதி நீட்டிக்கப்படுகிறது.
மேலும், இந்தக் காலகட்டத்தை ஆசிரியர்கள் தங்களின் கல்விசார் செயல்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உள்துறை அமைச்சகத்தின் இந்த வழிகாட்டுதல்களை அனைத்து கல்வி நிறுவனங்களும் கட்டாயமாகப் பின்பற்றவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
முக்கிய செய்திகள்
விளையாட்டு
27 mins ago
விளையாட்டு
18 mins ago
தமிழகம்
42 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago