ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 16-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களின் திறப்பு தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டே இருக்கும் சூழலில், தனியார் பள்ளிகள் சார்பில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே மழலையர் வகுப்புகளுக்கும் ஆரம்ப வகுப்புகளுக்கும் கூட ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு ஆன்லைன் கல்வி சாத்தியமில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. பல மணி நேரம் தொடரும் ஆன்லைன் வகுப்புகளுக்குக் கல்வியாளர்களும் பல்வேறு ஆசிரியர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அவை முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகப் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதல்வரின் ஒப்புதல் கிடைத்த பிறகு இதுகுறித்த நெறிமுறைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதில், எந்தெந்த வகுப்புகளுக்கு ஆன்லைன் கல்வியைக் கற்பிக்கலாம், எத்தனை மணி நேரம் எடுக்கலாம்? எந்த வயது வரை ஆன்லைன் வகுப்புகள் கூடாது? என்பன குறித்த விவரங்கள் வரையறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
15 mins ago
ஜோதிடம்
28 mins ago
வாழ்வியல்
33 mins ago
ஜோதிடம்
59 mins ago
க்ரைம்
49 mins ago
இந்தியா
1 hour ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago