பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களிடம் மறுதேர்வு எழுதுவதற்கு விருப்பக் கடிதம் பெற தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்வுத் துறைஇயக்குநர் (பொறுப்பு) மு.பழனிச்சாமி, அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:
ஜூன் 24-ம் தேதிக்குள்...
கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 வகுப்புக்கான வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் பாடத்தேர்வில் கணிசமான மாணவர்கள் பங்கேற்கவில்லை. இதையடுத்து தேர்வில் பங்கேற்காத மாணவர்களிடம் இருந்து மறுதேர்வு எழுதுவதற்கான விருப்பக் கடிதத்தை ஜூன் 24-ம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியர் பெற வேண்டும்.
அதில் மாணவர் பெயர், தேர்வுஎண் மற்றும் தேர்வு மைய எண் ஆகிய விவரங்கள் இடம்பெற வேண்டும். அந்த விருப்பக் கடிதங்களை தேர்வு எண் வாரியாக அடுக்கி ஜூன் 26-ம் அந்தந்த மாவட்ட தேர்வுத் துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாணவர்களிடம் இருந்து பெறப்படும் கடிதங்களின் அடிப்படையில் மறுதேர்வு நடத்துவதா அல்லது துணைத்தேர்வாக நடத்துவதா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
19 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago