சென்னையில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து சேவை

By செய்திப்பிரிவு

சென்னையில் 10-ம் வகுப்பு தேர்வுஎழுதும் மாணவர்கள், தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்புபோக்குவரத்து ஏற்பாடுகளைகல்வித் துறை மேற்கொண்டுள் ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா வெளியிட்ட செய்தி:

ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன்15-்ல் தொடங்குகிறது. இதையடுத்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயணிக்க ஏதுவாக 41 தடங்களில் 102 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தேர்வு நாட்களில் தினமும் காலை 7.30 மற்றும் 8 மணிக்கும், தேர்வு முடிந்த பின் மதியம் 1.45 மற்றும் 2.15 மணிக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுதவிர தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வதற்கு ஆசிரியர்கள், பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளிக்கு சென்றுவர ஏதுவாக நாளை (ஜூன் 8) முதல் காலை 9 மணிக்கும், மாலை 4மணிக்கும் வேளச்சேரி, செங்குன்றம், அம்பத்தூர், பெசன்ட் நகர் உட்பட 41 தடங்களில் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னையில் நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் தேர்வுஎழுத 115 சிறப்பு மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வுக்கு சென்றுவர போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என கல்வித் துறையும் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்