பிளஸ் 2-க்கு பிறகு என்ன படிக்கலாம்? என்று மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ மற்றும் எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ இணைய வழி 2-ம் அமர்வு வரும் 10-ம் தேதி நடக்கிறது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழியாக முன்னெடுத்து வருகிறது.
அதன்படி அடுத்து என்ன படிக்கலாம், எந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பிளஸ் 2 மாணவர்களின் கேள்விகளுக்கான பதில்களைத் தருவதோடு, மாணவர்களுக்கு பயனுள்ள வழிகாட்டுதலை வழங்கும் விதமாக ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற ஆலோசனை அமர்வை இணையம் வழி ‘இந்து தமிழ் திசை’ வழங்கி வருகிறது. இந்தத் தொடரின் 2-ம் அமர்வுஜுன் 10-ம் தேதி மாலை 3 முதல் 5 மணி வரை நடக்க உள்ளது.
இதில், ‘உயர்வுக்கு ஹோட்டல்மேலாண்மை கல்வி’ எனும் தலைப்பில் ஹோட்டல் மேலாண்மை கல்வியின் முக்கியத்துவம் குறித்துதி ரெசிடென்ஸி ஹோட்டல்ஸ் முதன்மை செயல் அதிகாரி பி.கோபிநாத், ஐ.எஃப்.சி.ஏ. நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளருமான டாக்டர் செஃப் சவுந்தர்ராஜன், எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இயக்குநர் டாக்டர் ஆண்டனி அசோக்குமார் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் ரூ.99/- பதிவுக் கட்டணம் செலுத்தி, http://connect.hindutamil.in/uuk.php என்ற லிங்கில் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் 2 மாதஇந்து தமிழ் இ-பேப்பரை இலவசமாகப் பார்க்கலாம். கூடுதல் தகவல்களுக்கு 9840961923, 8870260003, 9003966866 ஆகிய செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளவும். ‘இந்து தமிழ் திசை’ மற்றும் எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இணைந்து நடத்துகிறது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
37 mins ago
ஜோதிடம்
40 mins ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago