10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கும் பணிகள் நேற்று தொடங்கின.
ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் 25 வரை நடைபெறவுள்ளது.
இதேபோல், பிளஸ் 1 வகுப்பில் மீதமுள்ள பாடங்களுக்கு ஜூன் 16-ம் தேதியும், பிளஸ் 2 இறுதித்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூன் 18-ம் தேதியும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஹால் டிக்கெட் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
பள்ளிகளிலும் ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது. மேலும்,சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மற்றும்வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ள மாணவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்றுஹால் டிக்கெட்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
(10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு தொடர்பாக நமது நாளிதழில் நேற்று வெளியான செய்தியில், தேர்வுகள் நடைபெறும் மாதம் ஜூன் என்பதற்குபதில் ஜூலை என தவறுதலாகஇடம்பெற்று விட்டது. இந்தத் தவறுக்கு வருந்துகிறோம்.)
முக்கிய செய்திகள்
வணிகம்
41 mins ago
விளையாட்டு
1 hour ago
தொழில்நுட்பம்
2 hours ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
3 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago