நீட் தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ஆன் லைனில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என 350 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பிளஸ் 1 பொதுத்தேர்வில் ஒரு பாடத்தேர்வு நடத்தப்பட வேண்டியது உள்ளது. கரோனா கட்டுக்குள் வந்தவுடன் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும். நீட் தேர்வுக்கு நியூபாக்ஸ்என்ற நிறுவனத்தின் மூலம் இன்று (நேற்று) முதல் அனைவருக்கும் இலவசமாக ஆன்லைன் மூலமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
நூலகங்களில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்ளுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ்எல்சி தேர்வு அட்டவணையில், போதிய கால இடைவெளி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், கோபி கோட்டாட்சியர் ஜெயராமன், நகராட்சி ஆணையர் தாணுமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
8 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
18 mins ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
42 mins ago
வணிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
45 mins ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
சினிமா
2 hours ago