தினசரி மாணவர் வருகை இனி டிஜிட்டல் மயமாகிறது: டெல்லி அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

டெல்லியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாணவர் வருகை டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக துணை முதல்வரும் கல்வித்துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா கூறும்போது, ''பள்ளிக் கல்வித்துறையில் காகிதமில்லா வேலை நடக்க வேண்டும். இதற்காக டேப்லெட்டுகள் மூலம் மாணவர்களின் தினசரி வருகையை உறுதி செய்யுங்கள். ஒவ்வொரு வகுப்பு வாரியான வருகைகள், இதில் பதிவு செய்யப்பட வேண்டும். எந்தவோர் ஆசிரியரும் டேப்லெட் இல்லாமல் இருக்கக் கூடாது.

தினசரி காலை 9 மணிக்கு அனைத்துப் பள்ளிகளிலும் அன்றைய நாளில் வகுப்புக்கு வந்த மாணவர்களின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். இதை கல்வித் துறை இணை இயக்குநர்கள் சரிபார்க்க வேண்டும். ஏப்ரல் 1 முதல் இத்திட்டம் அமல்படுத்தப்படும்

தேர்வு முடிவுகளையும் இணையத்திலேயே பதிவேற்றி, பராமரிக்கத் திட்டமிட்டு வருகிறோம்.கல்வித் துறை இணை இயக்குநர்கள் அனைத்துப் பள்ளிகளுக்கும் டேப்லெட்டுகள் வழங்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்'' என்று மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

3 mins ago

க்ரைம்

9 mins ago

க்ரைம்

18 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்