மேலூர் அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் வரதராஜன், இலக்கியப் போட்டியில் வென்று 'இளம் எழுச்சிக் கவிஞர் விருது' பெற்றுள்ளார்.
புதுவை முத்தமிழ்க் கலை வளர்ச்சிக் கழகம் சார்பில் கவிதைப்போட்டி நடத்தப்பட்டது. இதில் வென்றவர்களுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
இதில் மதுரை அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் வ.வரதராஜனுக்கு 'இளம் எழுச்சிக் கவிஞர்' விருதை, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வழங்கினார்.
மாணவர் வரதராஜன், இதுவரை இலக்கியப் போட்டிகளில் 35-க்கும் மேற்பட்ட விருதுகள் மற்றும் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
'இளம் எழுச்சிக் கவிஞர்' விருதைப் பெற்ற மாணவனை பள்ளித் தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், உதவித் தலைமை ஆசிரியர் வாசிமலை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
ஜோதிடம்
20 mins ago
ஜோதிடம்
35 mins ago
ஜோதிடம்
48 mins ago
வாழ்வியல்
53 mins ago
ஜோதிடம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago