மெக்சிகோவில் உள்ள அகாபல்கோ நகரில், மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்றுப் போட்டியில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால்,செர்பியாவைச் சேர்ந்த இளம் வீரரான மியோமிர் கெக்மெனோவிக்கை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் நடால், 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் இப்போட்டியின் கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
கால் இறுதிச் சுற்றில் தென்கொரிய வீரரான குவான் சூ-வூவை எதிர்த்து நடால் ஆடவுள்ளார். மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் ஏற்கெனவே ரபேல் நடால் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்றால், தரவரிசையில் தற்போது 2-வது இடத்தில் உள்ள நடால், முதல் இடத்தைப் பிடிக்கவும் வாய்ப்பு உண்டு.
நேற்று நடந்த போட்டியில் வென்றதைப் பற்றி கருத்து தெரிவித்த நடால், “மியோமிர் மிகவும் ஆபத்தான வீரராக உள்ளார். மிகக் கடுமையாக போராடியே அவருக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற முடிந்தது” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
6 hours ago
வாழ்வியல்
7 hours ago
தமிழகம்
7 hours ago
ஆன்மிகம்
6 hours ago
கருத்துப் பேழை
8 hours ago