மகாராஷ்டிர மாநிலப் பள்ளிகளில்10-ம் வகுப்பு வரை மராத்தி கட்டாயம்: சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல்

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவில் உள்ள அனைத்துபள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரையிலும்மராத்தி மொழியை கட்டாயமாக்கு வதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள சிபிஎஸ்இ போன்ற மத்திய அரசு பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் 10-ம்வகுப்பு வரை மராத்தி மொழி கட்டாயமாக்கப்பட உள்ளது என்று மராத்தி மொழி அமைச்சர் சுபாஷ் தேசாய் கடந்தவாரம் தெரிவித்தார். அதற்கான சட்டமசோதா மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதுதொடர்பாக மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் சட்டப்பேரவையில் நேற்று கூறியதாவது:

அனைத்து பள்ளிகளிலும் பத்தாம்வகுப்பு வரையிலும் மராத்தி மொழியை கட்டாயமாக்குவது அரசின் கொள்கைமுடிவாகும். அரசு பள்ளிகளை தவிரசிபிஎஸ்இ, ஐபி, ஐசிஎஸ்இ பள்ளிகளில்மராத்தியை கட்டாயமாக்குவது தொடர்பாக ஆலோசித்து கீழ் அவையில் முடிவு செய்யப்படும். தற்போது தாக்கல் செய்யப்பட உள்ள மசோதா மூலம் 10-ம் வகுப்பு வரை மராத்தி மொழி கட்டாயம் படிக்க வேண்டும்.

இதன் மாதிரி திட்டம் குறித்து அரசுஆய்வு செய்துள்ளது. தென் மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் மாநில மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது என்று பேசினார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து சிவசேனா எம்எல்ஏபாஸ்கர் ஜாதவ் பேசுகையில், ‘‘மராத்திமொழியை கட்டாயம் படிக்க வேண்டியதன் அவசியம் என்ன. இதுகுறித்து மாநில அரசின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும்’’ என்றார்.

அதற்கு அமைச்சர், இதுகுறித்து அரசு தரப்பில் ஏற்கெனவே தெரிவிக் கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். அப்போது குறுக்கிட்ட பாஜக எம்எல்ஏ சுதிர் முங்கந்திவார், ‘‘தற்போது மராத்தி, ஆங்கிலம் அல்லது இந்திமொழியில் சட்டப்பேரவை நடத்தப்பட்டுவருகிறது. அதை மாற்றி பிரத்யேகமாக மராத்தி மொழியில் அவை நடத்தப்பட வேண்டும்’’ என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

8 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்