இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் நேற்று கூறியதாவது:
வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்காக, வரும் ஏப்.1-ம் தேதி முதல் பிஎஸ்-6 ரக வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வாகனங்களின் இன்ஜின்களில் பயன்படுத்து வதற்காக, பிஎஸ்-6 தர எரிபொருள்களை வரும் ஏப்ரல் முதல் கட்டாயம் விற்பனை செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, இந்தியன் ஆயில் நிறுவனம் பிஎஸ்-6 எரிபொருள் விற்பனையைத் தொடங்கி விட்டது. இந்தியன் ஆயில் நிறுவனம் தனது 2,300 பெட்ரோல் பங்க்குகளில் இந்த பிஎஸ்-6 எரிபொருள் விற்பனையைத் தொடங்கியுள்ளது.
இந்த பிஎஸ்-6 எரிபொருளில் சல்பர் அளவு 50 பிபிஎம் என்ற அளவில் இருந்து 10 பிபிஎம் என்ற அளவாக குறைக்கப்படும். இதன்மூலம், வாகனங்களில் இருந்து குறைந்த அளவு மட்டுமே புகை வெளியேறும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
12 mins ago
ஜோதிடம்
27 mins ago
ஜோதிடம்
40 mins ago
வாழ்வியல்
45 mins ago
ஜோதிடம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago