டோஹா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்டோலினா அதிர்ச்சி தோல்வி

By செய்திப்பிரிவு

டோஹா ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் 5-ம் நிலை டென்னிஸ் வீராங்கனையான ஸ்விட்டோலினா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

டோஹா நகரில் பெண்களுக்கான டோஹா டபிள்யூடிஏ ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்றுப் போட்டியில் உலகின் 5-ம் நிலை டென்னிஸ் வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் ஸ்விட்டோலினா அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவரை அமண்டா, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார். இப்போட்டி சுமார் ஒரு மணிநேரத்தில் முடிவடைந்தது. சர்வதேச டென்னிஸ் வீராங்கனைகள் தவரிசையில் அமண்டா 29-வது இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த மற்றொரு 2-வது சுற்றுப் போட்டியில் ரஷ்ய வீராங்கனையான எலீனா ரிபாக்கினா 3-6, 6-3, 6-1 என்ற செட்கணக்கில் ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியாவை வென்றார்.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

27 secs ago

தமிழகம்

15 mins ago

இந்தியா

7 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்