நாட்டின் முக்கிய பிரச்சினைகளை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் அமைந்துள்ள உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்தே உள்ளார். மேலும், நாட்டின் முக்கிய பிரச்சினைகளை விசாரிக்கும் இரண்டு அரசியல் சாசன அமர்வு உள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுஉள்ளது தெரிய வந்துள்ளது. நிதிபதிகளின் விவரம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 நீதிபதிகளும் நாட்டின் முக்கிய பிரச்சினைகளை விசாரித்து வருவதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
நீதிபதிகளுடன் ஆலோசனை
எச்1 என்ற தொற்று கிருமியால் பன்றிக் காய்ச்சல் ஏற்படுகிறது. இது மனிதர்கள் வழியாகும் பரவும். இதனால், நோய் தொற்று பரவாமல் இருக்க மருத்துவ குழுவுக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே பரிந்துரைனை செய்துள்ளார். இதுதொடர்பாக தலைமை நீதிபதி பாப்தே நீதிபதிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். மேலும், நீதிமன்றத்துக்குள் தொற்றுநோய் பரவுவதை தடுக்க நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கு தடுப்பூசி போடவும் பரிந்துரைத்தார். மேலும், பார் கவுன்சில் உறுப்பினர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டார். தலைமைநீதிபதியின் பரிந்துரையை செயல்படுத்துமாறு, வழக்கறிஞர்களுக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆலோசனை வழங்கினார்.
உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளேயே பன்றிக் காய்ச்சல் பரவி வருவதால், நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாக்க நீதிமன்றத்துக்கு வரும்நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் நேற்று சுவாசமுகமுடியை அணிந்து வந்தனர். மேலும், நீதிமன்றத்தை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
23 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
உலகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago